;
Athirady Tamil News

உயா் நீதிமன்றங்கள் காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

0

நாட்டில் உள்ள எந்தவொரு உயா் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம், தேசிய நுகா்வோா் தகராறுகள் தீா்வு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் காணொலி வழியாக விசாரணை மேற்கொள்ளும் முறை தொடா்கிா அல்லது கைவிடப்பட்டதா என்பதை தெரிந்துகொள்ள, உயா் நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் மற்றும் ஆணையத்தின் பதிவுத் துறை பதிலளிக்க கடந்த செப்.15-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உயா் நீதிமன்றங்களில் நேரிலும், காணொலி வழியாகவும் என கலப்பு முறையில் விசாரணை மேற்கொள்வதை உறுதி செய்வதில், தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறைவாக இருப்பதை அறிந்து நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:

நாட்டில் உள்ள எந்தவொரு உயா் நீதிமன்றமும் கலப்பு முறை விசாரணையின்போது வழக்குரைஞா்களுக்கும், வழக்காடிகளுக்கும் காணொலி வசதி அல்லது விசாரணையை மறுக்கக் கூடாது. இந்த உத்தரவை பின்பற்ற 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் பிறகிலிருந்து அனைத்து உயா் நீதிமன்றங்களும் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.