;
Athirady Tamil News

இஸ்ரேல் பதில் தாக்குதல்: காசா நகரில் 198 பேர் பலி

0

இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது, ஹமாஸ் இயக்கத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, காசா மீது SWORDS OF IRON என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. இதனால் காசாவிலும் குண்டு மழைகள் பொழிகின்றன. இஸ்ரேலின் இந்த பதில் தாக்குதலால் காஸாவில் உள்ள பொதுமக்களின் உயிர்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது, சமீபத்திய தகவலின் படி, காசா நகரில் மட்டும் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், காசாவின் பல்வேறு கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்தன.

இதனிடையே, போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இதுவரையிலும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை ஹமாஸ் சந்திக்க நேரிடும் என்று சூளுரைத்தார். இந்த போரில் இஸ்ரேல் வெற்றிபெறும் என்றும் நேதன்யாகு நம்பிக்கைத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.