;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் சோகம்; மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

0

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இத்த துயர சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே வியாழக்கிழமை (12) மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடத்தப்பட்ட மகனை தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்துகொண்டிருந்த நிலையில் மகனை காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.