;
Athirady Tamil News

பெயர் சூட்டும் முன்னே உயிரிழந்த சிசு

0

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்து ஐந்து நாட்களான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு பிறந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தை
எனினும் புதன்கிழமை (18) இரவு குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசு வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

அக் குழந்தையின் தாய்க்கு திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இது என தெரிய வந்துள்ளது.

மேலும் அக்குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.