;
Athirady Tamil News

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; நபருக்கு நேர்ந்த சோகம்

0

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 51 வயதான நபரே உயிரிழந்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.