;
Athirady Tamil News

LKG படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்ததால் நேர்ந்த சம்பவம்

0

தமிழக மாவட்டம் வேலூரில் எல்.கே.ஜி படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை
வேலூர் மாவட்டம், கோட்டைச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அருள் மற்றும் தீபம். இவர்களுக்கு 3 வயதில் விக்ரம் அருள் என்ற மகன் உள்ளார்.

இவர்களுடைய மகன், பேர்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் விக்ரம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, விக்ரமின் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளதை பெற்றோர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கான காரணத்தை விக்ரம் அருளிடம் கேட்டபோது, வகுப்பு ஆசிரியர் என்னை அடித்ததால் ரத்தம் வருகிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

பொலிசார் விசாரணை
சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட போது உறவினர்கள் பலரும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலிருந்து வந்த பொலிசார் நடந்த சம்பவம் குறித்து விக்ரம் அருளிடம் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே, ஆசிரியர் இதுபோல சிறுவனை அடித்துள்ளதாகவும், அதற்கு தாய் தீபம் பள்ளிக்கு சென்று இதுபோல அடிக்க வேண்டாம் என்று கண்டித்ததாகவும் தெரிகிறது.

தற்போது, மீண்டும் சிறுவனை அடித்துள்ளதால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.