;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு திடீரென படையெடுத்த ஆதிவாசிகள்; தனியார் விடுதியில் சிறப்பு வரவேற்பு!

0

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் 100க்கு மேற்பட்டோர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்கள் யாழின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஆதிவாசிகளுக்கு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும் யாழில் ஆதிவாசிகள் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.