;
Athirady Tamil News

யாழில் கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்ட ஆயுத பூஜை

0

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஏழு படிகளில் கொலு வைத்து நாதஸ்வர இசையுடன் நேற்றிரவு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் கூறை என்பன வழங்கப்பட்டன.

அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் பூஜைகளை நடாத்திய குருக்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பிரசாதம் வழங்கலுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

இந்த இல்லத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையானது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.