;
Athirady Tamil News

யாழில் வெள்ளைவானில் வந்தவர்கள் அரச ஊழியரின் வீட்டில் அட்டகாசம்!

0

யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற சிலர் அங்குள்ள அரச உத்தியோகஸ்தரின் வீடொன்றில் புகுந்து வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸார் தீவிர விசாரணை
பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும் உத்தியோகத்தரின் வீட்டுக்குள் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் , வீட்டில் இருந்தவர்களிடம் அடையாள ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்து அவற்றை பார்வையிட்டதுடன் அவர்களின் தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளது.

அதோடு வீட்டில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த ஆவணங்கள், சோதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பையில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம், மற்றும் ஆறரை பவுன் தங்க நகைகளும் குறித்த நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.