;
Athirady Tamil News

மட்டக்களப்பில் 8 வயது குழந்தையை தாக்கிய மௌலவி

0

மட்டக்களப்பில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் சனிக்கிழமை (28) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்காக பள்ளிவாசலுக்கு சென்ற போது சந்தேகநபர் ஒருவரால் குழந்தையை தடியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த குழந்தை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக ஓதாத காரணத்தினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.