;
Athirady Tamil News

மொட்டு கட்சிக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டும் : காமினி லொக்குகே

0

சிறிலங்கா அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் தமது கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பதிலளிக்க வேண்டுமென பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்தை மேற்கோள்காட்டி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தலையிட நிமல் லன்சாவுக்கு எந்தவொரு உரிமையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்
அத்துடன், இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் தவறான முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.