;
Athirady Tamil News

நான்கு நாட்கள் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

0

நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த ஹட்டன் அரச பேருந்து எரிபொருள் நிரப்பு நிலைய பணிப்பாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இன்று (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி ஹட்டன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
அத்தோடு, உயிரிழந்தவர் ஹட்டன் அரச பேருந்து எரிபொருள் நிரப்பு நிலைய பணிப்பாளர் எனவும் நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், செனன் தோட்டத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை
மேலும், சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் திக்ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.