;
Athirady Tamil News

4 -ம் வகுப்பு மாணவனை 108 முறை காம்பஸால் தாக்கிய சக மாணவர்கள்

0

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் 4 -ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை, சண்டையின் காரணமாக சக மாணவர்கள் சேர்ந்து 108 முறை காம்பஸை வைத்து குத்தியுள்ளார்.

தந்தையிடம் மாணவன் புகார்
மத்திய பிரேதச மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, 4 -ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே சண்டை நடந்துள்ளது. அப்போது, ஒரு மாணவனை 3 மாணவர்கள் சேர்ந்து 108 முறை காம்பஸை வைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்றதும் காயத்தை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது அவர் மாணவரிடம் கேட்டபோது, சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தாக்கியதாக கூறியுள்ளார்.

பொலிஸில் புகார்
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார். மேலும், அவர் சிசிடிவி காட்சிகளையும் கேட்கவே, பள்ளி நிர்வாகம் அதனை தர மறுத்துள்ளது.

பின்பு, சிறுவனின் தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்டு தாக்கிய மாணவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.