;
Athirady Tamil News

இலங்கை பரிசாக வழங்கிய உலகின் சோகமான மாலி யானை பரிதாபமாக உயிரிழப்பு!

0

உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் ‘மாலி’ யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

’மாலி’ யானை பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானை உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள்னர்.

பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரியவந்தது.

மேலும் குறித்த யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே வாழ்ந்து வந்துள்ளது.

மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசாங்கத்தால் பரிசாக வழங்கப்பட்டது.

மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது.

மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.

அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.