;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பாடசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு!

0

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப் பள்ளியொன்றின் அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (05) எதிர்பாராத வேளையில் திடீரென பாரிய சத்தத்துடனான குண்டு வெடித்துள்ளது.

இத்தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மீட்பு படையினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலிற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காமல் உள்ள பட்சத்தில், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.