;
Athirady Tamil News

கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

0

கொழும்பு கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (2023.12.18) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.