;
Athirady Tamil News

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

0

யாழ் – கல்வியங்காடு பகுதியில் போதைப்பாக்ககு விற்பனை செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் மாணவர்களுக்கு போதைப்ப பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 07 கிலோகிராம் போதைப்பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.