;
Athirady Tamil News

பல நாட்கள் தூங்கவில்லை…. லொட்டரியில் பெருந்தொகை வென்ற இந்திய வம்சாவளி கனேடியர் உருக்கம்

0

ஒன்ராறியோவின் Pickering பகுதியை சேர்ந்த 69 வயது இந்திய வம்சாவளி கானேடியர் ஒருவர் லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ளார்.

100,000 டொலர் பரிசாக
டிசம்பர் மாதம் நடந்த Lotto Max குலுக்கலில் மகேந்திரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு 100,000 டொலர் பரிசாக கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 7 இலக்கங்களில் அவர் 6-ஐ சரியாக கணித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

லொட்டரியில் வெற்றி பெற்றது குறித்து மகேந்திரன் கிருஷ்ணபிள்ளை தெரிவிக்கையில், தமது பேரனிடம் சீட்டைக் கொடுத்து சரிபார்க்க சொன்னதாகவும், அவர் தமது அலைபேசியில் பதிவு செய்துவிட்டு வெற்றி பெற்றுள்ளதாக கூறியதை தாம் நம்பவில்லை என்றும் கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

பல நாட்கள் தூக்கம் வராமல்
மட்டுமின்றி, தம்மிடம் விளையாட்டு காட்டாமல் இங்கிருந்து ஓடிவிடு என விரட்ட முயன்றதாகவும் கிருஷ்ணபிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே, தாம் பொய் சொல்லவில்லை என்றும், உண்மையில் நீங்கள் 100,000 டொலர் வென்றுள்ளதாகவும் தமது பேரன் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாம் வென்றுள்ளது உறுதியான பிறகு அந்த மகிழ்ச்சியில் பல நாட்கள் தூக்கம் வராமல் தவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தொகையில் ஒரு குடியிருப்பு வாங்கும் திட்டமிருப்பதாகவும், உண்மையில் தம்மால் இதுவரை அந்த வெற்றியை நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.