;
Athirady Tamil News

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்

0

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நற்சான்றிதழை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நேற்று முன்தினம் (05.01.2024) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் இந்திய ஜனாதிபதி ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.

பதவி விலகிய மிலிந்த மொரகொட
மிலிந்த மொரகொட முன்னதாக அந்தப் பதவியை வகித்தார் எனவும் அவர் பதவி விலகியதனை அடுத்து குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும், சேனுகா திரேனி செனவிரத்ன முன்னர் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும் பிரித்தானியாவுக்கான தூதுவராகவும் தாய்லாந்து நாட்டுக்கான தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.