;
Athirady Tamil News

மலேசியாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி, 4 பேர் மாயம்!

0

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானர். மேலும் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி,

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததாகவும், அதையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புப் பணியினர் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், நிலச்சரிவில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் நிலச்சரிவில் உயிருடன் புதைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.