;
Athirady Tamil News

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மன்னாருக்கு விஜயம்!

0

புதிதாக பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மன்னாருக்கு விஜயம் செய்தார்.

இதன்போது மடு தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட உயர்ஸ்தானிகர், கடற்றொழிலாளர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (15.02.2024) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் ,நானாட்டான்,முசலி ,மாந்தை மேற்கு ஆகிய 4 மீனவ சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.