;
Athirady Tamil News

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

0

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடா – பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன.

இதனால் அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத குடியேற்றம்
பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றன.

கடந்த ஆண்டு, நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது.

இது, இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் எதிர்பார்க்க வேண்டிய மாற்றங்கள்
மாணவர்கள் நேரடியாக திறமையான தொழிலாளர் விசாக்களுக்கு மாறுவது கடினமாக இருக்கும்.

ஏனெனில் ஸ்பான்சர் செய்யப்படும் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் 26,200 பவுண்ஸில் இருந்து 38,700 பவுண்ஸாக அதிகரிக்கப்பட உள்ளது.

பிரித்தானியாவில் சராசரி பட்டதாரி சம்பளம் 33,000 பவுண்ஸ்க்கு மேல் உள்ளது, இது முன்மொழியப்பட்ட வரம்புக்குக் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.