;
Athirady Tamil News

புதிய திட்டத்துடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் கட்சி தற்போது நிமல் லான்சா குழு மற்றும் பொது ஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிரேஷ்டர்கள் குழுவின் தலைமையிலான பல சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போன்றவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்புள்ள பொது ஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.