;
Athirady Tamil News

அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

0

அவசர தேவை கருதி புதிதாக 2500 ஆங்கில ஆசிரியர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

மூன்று வருட ஒப்பந்த காலத்துக்கு ஆங்கில மொழி மூலம் பாடங்களை கற்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

பட்டதாரி ஆசிரிய நியமனம்
இதற்கிடையில் திறந்த போட்டி பரீட்சையின் மூலம் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கக்கூடிய 1,100 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளவும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்துமாறும் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டளவில் குறைந்தது 200,000 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதே தமது இலக்காகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.