;
Athirady Tamil News

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

0

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று(மார்ச் 19) திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில், இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பகுதியில் கேரள மீனவர்கள் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாகவும் இதன் காரணமாக, மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கேரள மீனவர்கள் தமிழக கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காணக் கோரியும் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்பட சுமார் 280க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.