;
Athirady Tamil News

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

0

காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த இரண்டு நாட்களில் தமது தரப்பில் இரண்டு படையினர் கொல்லப்பட்டும் தளபதி உட்பட ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய சினைப்பர் தாக்குதலில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் தளபதி ஒருவர் உட்பட 07 பேர் காயமடைந்தனர்.

நோயாளர் காவு வண்டியை இலக்கு வைத்து
நோயாளர் காவு வண்டியை இலக்கு வைத்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் இதுவரை
21 வயதான அவர் ரிஷோன் லெசியனைச் சேர்ந்தவர் மற்றும் நஹால் படையணியின் 932 வது பட்டாலியனில் ஒரு சிப்பாயாக இருந்தார்.

காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் தமது தரப்பில் இதுவரை 252 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.