;
Athirady Tamil News

தொடர் வெப்பநிலையிலும் வெள்ளத்தால் அவதியுறும் மக்கள்

0

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக வத்தளை – பரணவத்தை பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 6 மாத காலமாக நீர் தேங்கியிருப்பதோடு அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

இந்த பகுதியை சூழவுள்ள ஆறுகள் சிறு மழைக்கு கூட பெருக்கெடுப்பதாலேயே இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு வீடுகளுக்குள் நீர் தேங்கியுள்ள நிலையிலும் இந்த மக்கள் தமது நாளாந்த செயற்படுகளை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.