;
Athirady Tamil News

இஸ்ரேலின் மோசமான தாக்குதல்: சிரியாவில் 44 பேர் பலி

0

சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் அலெப்போரின் புறநகா் பகுதியான ஜிப்ரீனில் இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலானது, அலெப்போ சா்வதேச விமான நிலையத்திறகு அருகில் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹிஸ்புல்லா ஆயுதப் படை
இந்த தாக்குதலானது, லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படையினரின் ஏவுகணை தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர், 7 ஹிஸ்புல்லா படையினர் மற்றும் ஒரு ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவை சேர்ந்தவருமே உயிரிழந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான வான்வழித் தாக்குதல் இது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளதுடன் இதில் பலர் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.