;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பில் விபத்து: இரு யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி

0

புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (05) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், விசுவமடுவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக சிகிச்சை
இந்த விபத்தானது புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் ஏற்ப்பட்டுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை
மேற்படி விபத்து சம்பவத்தில் 23 மற்றும் 24 வயதுடைய ஒட்டுசுட்டானை சேர்ந்த யுவதிகளே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணமென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.