;
Athirady Tamil News

புயல், கனமழை, நிலநடுக்கம்… ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

0

புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு பெரிதளவில் மக்கள் பாதிப்படைந்தனர்.

இதனால் நாடு முழுக்க இரு வாரங்களில் இதுவரை 77 பேர் பலியாகி, 137 பேர் காயமடைந்ததாக ஆப்கன் பேரிடர் மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் யூசுஃப் அகமது தெரிவித்தார். இதில், 26 பேர் கடந்த 2 நாள்களில் மட்டும் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் 44 பேர் இந்தப் பேரிடரில் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியில் 32 பேரும், தென்மேற்கு பலோச்சிஸ்தானில் 12 பேரும் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 அளவில் பதிவாகியுள்ளது.

ஆப்கனில் கடந்த ஜனவரியில் பெய்த கனமழை மற்றும் கடும் பனியின் காரணமாக 60 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.