;
Athirady Tamil News

இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடி குறித்து எச்சரிக்கை

0

எதிர்வரும் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் இந்த சூழ்நிலையை நன்கு கையாண்டு வருவதாகவும், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிக்கலான சூழ்நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியின் காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பாக ஒரு சிக்கலான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில், குறிப்பாக பொருளாதாரச் சூழ்நிலையால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் ஏற்கனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது.

முறைசார்ந்த திட்டங்கள்
எரிபொருள், மின்சாரம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளைக் கையாள்வதற்காக பல முறைசார்ந்த திட்டங்களைத் தயாரிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியக் குழுக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான நிவாரணத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.