;
Athirady Tamil News

ஈரானில் கைது செய்யப்பட்டார் “ரமேஷ்”

0

புனித ரமழான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் அடுத்த வார கொண்டாட்டங்களின் போது தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களுடன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை கைது செய்ததாக ஈரானிய காவல்துறை அறிவித்தது.

ஈரானிய ஊடகங்களின்படி, தலைநகர் தெஹ்ரானின் மேற்கில் உள்ள கராஜ் என்ற இடத்தில் “ரமேஷ்” என்று அழைக்கப்படும் முகமது ஜாக்கர் (Mohammad Zaker,) மற்றும் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளுக்கு
அவர்களுடன் வந்த மேலும் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

2020 ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்ட உயர் தளபதி காசிம் சுலைமானியின் (Qassem Soleimani )நான்காவது ஆண்டு நினைவு தினத்தை குறிக்கும் நினைவிடத்தில், ஜனவரி மாதம் ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.