;
Athirady Tamil News

சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கை தம்பதியினர் அதிரடி கைது!

0

இலங்கைக்கு போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி செல்ல முயன்ற தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (11-04=2024) இரவு இலங்கைக்கு வருகைத் தந்தவிர விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை இந்திய குடிவரவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 45 வயதான ஆண் ஒருவரும் 40 வயதுடைய அவரது மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கியிருந்து, தங்களுக்கான இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மையில் அவர்கள் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் குறித்த போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இருவர் தொடர்பிலும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.