;
Athirady Tamil News

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி பலி

0

தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் ஒரு மூத்த தளபதியை கொன்றதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

முஹம்மது ஷாஹோரி, என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார். இவர் ரத்வானின் மேற்கு மாவட்ட ரொக்கெட் பிரிவின் தளபதியாக இருந்தார்.

வாகனத்தில் சென்றபோது இலக்கு
ஷஹோரி செஹாபியேவை ஒட்டியுள்ள கஃபர் டூனைன் கிராமத்தில் வாகனத்தில் சென்றபோது இலக்கு வைக்கப்பட்டார்.

தெற்கு லெபனானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய முகப்புப் பகுதியை நோக்கிய பல ரொக்கெட் தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு ஷஹோரி பொறுப்பு என்று இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்தது.

மற்றொரு ஹிஸ்புல்லா தளபதி
ஷாஹோரியுடன், மற்றொரு ஹிஸ்புல்லா தளபதி மஹ்மூத் ஃபட்லால்லாவும் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் ஹிஸ்புல்லாவின் ரொக்கெட் பிரிவில் உறுப்பினராகவும் இருந்ததாக இஸ்ரேல் படைத்தரப்பு கூறுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பு அவர்கள் இருவரின் மரணத்தையும் இன்று முன்னதாக அறிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.