;
Athirady Tamil News

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களினால் நாவிதன்வெளி – சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு !

0

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா கல்லூரிக்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் கல்முனை அல்-ஹாமிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும், தாருல் ஹிக்மா கல்லூரி முதல்வருமான ஏ.சி. தஸ்தீக் (மதனி, ஹாமி) தலைமையிலான கல்லூரி நிர்வாகத்திடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.

நாவிதன்வெளி பிரதேச சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா கல்லூரி நிர்மாண பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதிக்கான ஆவணங்களை கையளித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரதேச அமைப்பாளருமான ஏ.சி.ஏ. நஸார் ஹாஜி, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.