;
Athirady Tamil News

கனடாவில் மாணவர்கள் மத்தியில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

0

கனடா – ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இணைய வழி சூதாட்டம்
இணைய வழியில் இளைஞர்களை இலக்கு வைத்து சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் செலுத்த தவறிய ஒன்றாரியோவின் ஒரில்லா நகர் மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மோசடி நடவடிக்கைகள் Topbets என்ற இணைய தளத்தின் வழியாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை ஒன்றாரியோ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.