;
Athirady Tamil News

மனைவியின் மருத்துவக் கட்டணம் செலுத்த பணம் இல்லை… கணவன் எடுத்த முடிவு

0

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கட்டணம் செலுத்த முடியாமல் போனது
குறித்த நபர் மீது இரண்டாவது நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தம்மால் மனைவியின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் போனது என்று Ronnie Wiggs என்ற அந்த நபர் பொலிசாரிடம் கண்கலங்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவிலேயே அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் அமைந்துள்ள Centerpoint சுகாதார மையத்தில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி
தொடர்புடைய பெண்மணி அந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் பெற்றுவந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. மருத்துவமனையில் எவரும் கவனிக்காத நிலையில், தமது மனைவியை கழுத்தை நெரித்து Ronnie Wiggs கொலை செய்துள்ளார் என்றே சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது மனைவியை கொலை செய்துள்ளதை Ronnie Wiggs ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனாலையே, மனைவியை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.