;
Athirady Tamil News

முதன் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ். இளைஞன் வியாஸ்காந்த்

0

ஐபிஎல் (IPL) தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் அணி சார்பாக இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

நாணய சுழற்சி

இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் அவர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கவுள்ளார்.

அதேவேளை, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.