;
Athirady Tamil News

தாய்வானை உரிமை கொண்டாடும் சீனாவின் அடுத்த நகர்வு: களமிறங்கியுள்ள இராணுவம்

0

தைவானின்(Taiwan) சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் இராணுவப் பயிற்சியை சீனா(China) தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன இராணுவம் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டை சீனா உரிமை கொண்டாடி வருவதால் தைவான் அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தீவிர போர் பயிற்சி
இந்த விடயத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா(America)இருக்கின்றது. தைவானை மிரட்டும் வகையில் அந்நாட்டை சுற்றி தீவிர போர் பயிற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

தைவானின் புதிய அதிபர் பதவியேற்ற நிலையில் சீனா இவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இது குறித்து சீன இராணுவ செய்தியாளர் கூறுகையில், “இந்த போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு வலுவான தண்டனையாக இருக்கும்.

சீன இராணுவம்
கூட்டு கடல்-வான் போர் தயார்நிலை ரோந்து, முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள், படைகளின் கூட்டு உண்மையான போர் திறன்களை சோதிக்க தீவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

தைவான் படைகளின் பிரிவினைவாதச் செயல்களுக்கு இது ஒரு வலுவான தண்டனை மற்றும் வெளி சக்திகளின் தலையீடு, ஆத்திரமூட்டலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகும்” என கூறியுள்ளார்.

சீனாவின் குறிப்பிட்ட இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கையில், “சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல்கள் ஆகும்.

தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது” என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.