கடல் கொந்தளிப்பு முன்னெச்சரிக்கை – நெடுந்தீவு போக்குவரத்து இன்று இடம்பெறாது!
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/05/download-7.jpeg)
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் – நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் இன்று வெள்ளிக்கிழமை (24)கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.