;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் 16 வயது மாணவர்கள் இருவர் பலி

0

அனுராதபுர நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று காலதிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.