உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் அரசாங்க அதிபர் சந்திப்பு
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (05.02.2025) பி. ப. 04.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலமைகள், மீள்குடியேற்ற நிலமைகள், சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சனைகள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.




