;
Athirady Tamil News

மட்டக்களப்பில் மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகன்

0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார்.

குறி்த்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மகளுக்கும் மருமகனுக்கும் இடையே வாக்குவாதம்
குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மருமகன் மகளை தாக்கியதை கண்ட தந்தை அதை தட்டிக்கேட்டுள்ளார்

இதனையடுத்து மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.