;
Athirady Tamil News

யாழில் சமையல் வேலைகளில் ஈடுபட்ட நபர் திடீர் மரணம்

0

யாழில் திடீரென மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஆணொருவர், கடந்த ஒன்றரை வருடகாலமாக புத்தூர் பகுதியில் உள்ள விடுதியில் சமையல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை மூச்செடுக்க சிரமப்பட்ட இவர் திடீரென மயங்கி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.