50 ஆண்டுகளின் பின்னர் மாவிட்டபுரம் கந்தனுக்கு மகா கும்பாபிஷேக விழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபு ரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா 50 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.07 மணி தொடக்கம் காலை 10.09 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.32 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன. எண்ணெய் காப்புச் சாத்தும் வைபவம் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 10ஆம் திகதி வியாழக்கிழமை வரையான நான்கு தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.