;
Athirady Tamil News

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் ரத்து!

0

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் விமான நிலையல் அருகில் மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

லாகூரில் மூன்று குண்டு வெடிப்புகள்
இந்தியாவில் ஜம்மு கஷ்மீரில் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் operation sindoor என பெயரிடப்பட்ட தாக்குதலை இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்டிருந்த்து.

அந்த தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.