;
Athirady Tamil News

சங்கானையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்

0

சங்கானையில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த 26 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இதில் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம்(20) இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சி பார்த் துக்கொண்டிருந்தார்.

இதன்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே மயக் கமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இதய உறை அறைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரி சோதனைகளில் தெரிவிக்கபட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.