;
Athirady Tamil News

இந்த நாட்டில் நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்லத் தடை

0

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை நடைபயிற்சிக்காக பொது இடங்களில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளது

2019 இல் தெஹ்ரானில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் பொலிஸ் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, கடந்த வாரத்தில் மேலும் 18 முக்கிய நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நாய்களை வாகனங்களில் பயணிக்கச் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

1979 இல் ஆட்சிக்கு வந்த ஈரானிய புரட்சிகர அரசாங்கம், நாய் வளர்ப்பை கண்டித்துள்ள நிலையில், மேலும் நாய்கள் அசுத்தமானதாக கருதப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.