;
Athirady Tamil News

Viral Video: கழுகை மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க வைத்த மீன்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்

0

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதற்கு சந்திக்கும் சிரமத்தையும், அதன் பின்பு சாமர்த்தியமாக கையாண்டு மீனுடன் பறக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

கழுகின் மீன் வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.

இங்கு காணொளி ஒன்றில், கழுகு மிகப்பெரிய மீனை வேட்டையாடுகின்றது. ஆனால் குறித்த மீன் அளவில் பெரிதாக இருப்பதால், கழுகை நீரிலிருந்து எழும்ப விடாமல் தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டே இருக்கின்றது.

இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு நடைபெற்ற நிலையில், பின்பு கழுகு தனது ஒற்றைக்காலில் அந்த மீனை பிடித்துக் கொண்டு அசால்ட்டாக எழும்பி பறந்துள்ளது.

மீனை பிடித்துக் கொண்டு பறந்த கழுகின் கிட்டப்பார்வை காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.