;
Athirady Tamil News

45 நாட்களில் 4000 KM தூரத்தை கடக்க துணிந்த நபர்

0

வெலிமடையை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் 45 நாட்களில் 4000 KM தூரத்தை கடக்க துணிந்த ஒரு புதிய சாதனை ஒன்றினை படைக்க முயற்சி செய்து வருகின்றார்.

இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக இவர் திங்கட்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை வந்தடைந்தார்.

தற்போது மருதமுனை பகுதிக்கு 27 வது நாளில் வந்துள்ளதாகவும் தனது ஊர் வெலிமடை குருத்தலாவ என்றும் கரையோரங்களை தற்போது சுற்றி வருகை தந்துள்ளதாகவும் பொத்துவில் பகுதிக்கு சென்று பின்னர் பதுளைக்கு சென்று மீண்டும் தனது ஊரை அடைவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார் .

இன்னும் தனக்கு 17 நாட்கள் இருப்பதாகவும் 14 நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்தால் புதிய சாதனை ஒன்றினை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.